Group 4 Free Training Class; Veterans can attend: Perambalur Collector!
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 24.07.2022 அன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்விற்கு, பெரம்பலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யும் பொருட்டு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.04.2022 அன்று காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதில் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் (பொ) அங்கையற்கண்ணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.