In Pembampur, free training for home appliance repair
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், 2018ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், வயது 18க்கு மேல் உள்ள, எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
தொடர்ந்து 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் பயிற்சியில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 25 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு அருகில், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.