In Perambalur, a case has been registered against the allies including IJK and BJP for hoisting party flags in violation of the rules of election conduct!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்காக இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பிஜேபி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எவ்வித முன் அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதியை மீறி தங்களது கட்சி கொடிகளை கம்பங்கள் நட்டு கட்டியதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி டூவீலரில் ஊர்வலம் வந்ததாக பிஜேபியினர் மீதும் கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை என்பவர் அளித்த புகாரின் பேரில், IPC 143,341,188 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அக்கட்சியினர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!