In Perambalur
Black fungus attack kills one more today! The death toll rise to 3
இதுவரை பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பிடியில் சிக்கி மீண்டும் வரும் வேளையில் அடுத்தாக கருப்பு பூஞ்சை
பொது மக்களை மிரட்ட தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் அந்த நோயால்
பொன். கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபலாபுரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (62).ஓய்வு டிக்கெட் பரிசோதகர். கொரோனா தொற்று உறுதியானதால் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதனால் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.