In Perambalur car collision with a lorry near the college director Kills!

பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில் திருச்சியை சேர்ந்த கல்லூரி செயலர் பலியானர் ! இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருகின்றனர்.

shagayaraj-director-trichy-kalaikavery-fineatrs-college


பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான லாரி ஒன்று டீசல் பிடிப்பதற்காக அருகே தொழுதூரை நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை சின்னாறு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். முன்னே சென்ற வாகனத்தின் மீது லாரி மோதமல் இருக்க தீடீரென பிரேக் பிடித்தார்.

அப்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திருமாந்துறை அருகே எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் திருச்சி காவேரி கலைக்கல்லூரி செயலர் சகாயராஜ் (வயது சுமார் 0) சம்பவ இடத்லேயே பரிதாபமாக உயிழந்தார்.

காரை ஓட்டி வந்த ரமேஷ் (வயது 40), காரில் பயணித்த மீரா (வயது 55), இருவரும் படுகாயம் அடைந்தவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ரமேஷ், மீரா ஆகிய இருவரும் மேற்சிகிச்சைக்கா திருச்சி மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!