In Perambalur near the village temples and lampstands in the piggy bank robbery
பெரம்பலூர் அருகே கிராமக் கோயில்களில் உண்டியல் மற்றும் குத்துவிளக்குகள் மாயமானது குறித்து குன்னம் போலீசார் விசாரைண நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் அசூர் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் அதே சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவர் கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கோயில் நடையை சாத்திவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
செய்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் வருகை இருக்கும் என்பதாலும், கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் இன்று காலை தாமதமாக பிச்சைபிள்ளை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஒரு உண்டியலும், குத்துவிளக்களும் மாயமாகியிருந்ததோடு, மற்றொரு உண்டியலும் உடைக்கப்பட்டு, அதன் உள்ளே இருந்த பக்தர்களின் காணிக்கையும் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஒதியம் கிராம முக்கியஸ்தர்கள் சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான பொருட்களின் மதிப்புரூ.50 ஆயிரம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.பெரம்பலுõர் அருகே கோயிலில் உண்டியல் மற்றும் குத்துவிளக்குகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.