In Perambalur palaiyur near Sri Arul sakthi Mariamman Temple Pongal, the puja mavilkku.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தில் ஸ்ரீ அருள்சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர், ஸ்ரீ அருள்சக்தி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இரவு மாரியம்மன், விநாயகர் சுவாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி கும்பிட்டனர்.