In Perambalur, police attempt suicide by drunken mourning over wife’s death!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வீராக்கண் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வராஜ் (வயது 50), இவர் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில், தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் காவலர் குடியிருப்பில் மகள் சுபாஷினி (21), கருணாகரன் (16) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மாலதி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த துக்கம் தாங்க முடியாமல் அடிக்கடி குடிபோதையில் வந்ததால் செல்வராஜீவிற்கும், அவரது மகன் கருணாகரனுக்கும் நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருணாகரன் இனி வீட்டிற்கு வர மாட்டேன் என் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார், அவரது மகள் சுபாஷினி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் மேலும், மனமுடைந்த செல்வராஜ் குடிபோதையில் வீட்டின் பெட்ரூமில் உள்ள காற்றாடியில், வேஷ்டியால் தூக்கு மாட்டி கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த அவரது மகள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.