In Perambalur, the seller of banned lottery tickets arrested!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட, துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தின் கீழ் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை நடப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு, இன்று காலை 8.30 மணியளவில், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் சென்ற போலீசார், அங்கு லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள அவ்வையார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல் (38) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதோடு, செல்போன் மற்றும் ரொக்கம் ரூ. 5240யும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.