In Perambalur van near the unidentified female victim.

deadபெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள (சர்க்கரை ஆலை)எறையூர் சின்னாறு பஸ் நிறுத்தம் அருகே இன்று மாலை சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த நெடுஞ்சாலை சுற்றுக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!