In Perambalur was held in leprosy awareness rally
பெரம்பலூரில் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவிகள் உலக தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இன்று காந்தியடிகளின் 70வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் நகரில் இருக்கும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் இருந்து புறப்பட்ட மாணவிகள் பேரணியாக சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வரை சென்றனர். பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கைகள் இணையட்டும், தொழுநோய் மறையட்டும் என்ற வாசகங்களை முழக்கமிட்டவாறே பேரணியில் சென்றனர். முன்னதாக ஸர்பஷ் உறுதிமொழியை செவிலியர் கல்லூரி மாணவிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.