Kalpana Chawla Award for Heroic Coastal Activism: Perambalur Collector Announcement!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது முதலமைச்சரால், சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளதால், தகுதி வாய்ந்த பெண்கள் கருத்துவினை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க்வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 05.08.2021 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!