kamal fans petition to the collector for Perambalur Angalamman temple pond and raised Restructuring

Writing Petition with white chalk on a blackboard.
பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் குளத்தை தூர் வாரக்கோரி கமல் ரசிகர்கள் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் கொடுத்துள்ள மனு :
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலம்பாடி சமத்துவபுரத்திற்கும் – அங்காளம்மன் கோவில் பின்புறத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. தற்போது அந்த உரிய பராமரிப்பு இன்றி தூர்ந்து போய் உள்ளது.
மேலும், அக்குளத்தை தூர் வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், கோவில பக்தர்கள், ஆடு, மாடு போன்ற கால்நடை பறவைகளும் நீர் அருந்தும். மேலும் அப்பகுதியில் வீணாகும் மழை நீரை சேமித்து நிலத்திடி நீர்மட்டம் உயரும், அதற்கு மாவட்ட நிர்வாகம் தூர் வார அனைத்து வகையிலும் கமல் ரசிகர் மன்றம் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளது எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497