Local Body Posts Auction Near Perambalur, Announcing boycott of election with Hosting Black Flag

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலெக்டர் வே. சாந்தா மற்றும் தேர்தல் பார்வையாளர் அனில்மேஷரம், போலீஸ் எஸ்பி நிஷா ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், பேரளி ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், அதை தடுத்து, முறையான நடவடிக்கை எடுக்க தெரிவித்துள்ளனர். ஆனால், மனுகுறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பேரளியை சேர்ந்த ஒரு பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தேர்தலையும் புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!