Makkalai Thedi Maruthuam – Minister Sivasankar launched the project in Perumathur.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான குன்னம்.சி.ராஜேந்திரன் முன்னிலையில் இன்று காலை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வீடு வீடாக , பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று மாத்திரை பெட்டிகளை வழங்கினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநர் வினைல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, பெருமத்தூர் ஊராட்சித் தலைவர் சுரேஷ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!