Memorial Day Remembered in Perambalur Police: 63 bulls are standing with a flower ring
பணியின் போது உயிரிழந்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டு தோறும் அக்.,21ல், வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அனைத்து பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஸ்தூபியில் வீரவணக்க நாள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமித்தல் தலைமையில் காவல்துறையினர் 21குண்டுகள் மூன்று முறை 63 குண்டுகள் முழங்க ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செய்தனர்.