Mysterious death of a youth near Perambalur: Police are investigating!

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா-சுமதி ஆகியோரின் மகன் விக்கி (எ) விக்னேஷ்(20), இவர், நேற்றிரவு 8 மணி அளவில் அவரது சித்தியை அருமடல் கிராமத்தல் இறக்கி விட்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் விக்னேஷ் வீடு திரும்பாததால், இன்று காலை உறவினர்கள் தேடிய போது, சறுக்கு பாலம் என்ற பகுதியில், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தா? அல்லது கொலையா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!