National Siddha Medical Day Celebration at Perambalur Government General Hospital!
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் 5வது தேசிய சித்த மருத்துவ தின விழா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜுனன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை பிரிவு சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். மருத்துவர் விஜயன் சித்தர் தினத்தைப் பற்றிய சிறப்புரை ஆற்றினார். இருக்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் கலா, மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர் .குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக நெல்லிக்காய் லேகியம், உரை மாத்திரை அடங்கிய பெட்டகமும், விழாவிற்கு வந்தவர்களுக்கு முருங்கை சூப், சுண்டல் வழங்கப்பட்டது.