New groom commits suicide by hanging himself in bathroom; Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன் மகன், தியாகராஜன் (வயது 29), கடந்த 13ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது. இன்று காலை பார்த்த போது ஆள் இல்லாதால், தேடி பார்த்த போது பாத் ரூமில் உள்ள கம்பியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து, அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.