Out-of-state liquor dealer arrested in Perambalur
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஜமாலியா நகர் ஆத்தூர் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சுந்தரராஜன் (47), கொரோனா ஊரடங்கு காரணமாக, டீக்கடை அருகே மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில 16 மதுப்புட்டிகள் இருப்பதை கண்டுபிடித்ததுடன், அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப் பதிந்து, கைது செய்ததோடு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மதுப்புட்டிகள் எங்கிருந்து வருகிறது, அதன் பிண்ணனியில் இருப்பவர்கள் கடத்தல் கும்பலுக்கு தீவிர வலை வீசி தேடி வருகின்றனர்.