Passengers demand authorities to remove encroachments on Perambalur-Attur road to avoid accidents!
பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட, ஜமாலியா நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வரும் வாகனங்கள் அடிக்கடி இரவில் விபத்திற்கு உள்ளாகின்றன. வழக்கம் போல், நேற்றும் ஒரு லாரி சேலம் – மேட்டூர் டேமில் இருந்து அரியலூருக்கு சரக்கு ஏற்றி சென்ற கனரக லாரி விபத்திற்குள்ளாகி, டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிய ரக கார்கள் மோதிருந்தால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து இடையூரை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.