Perambalur: Banner missing from the frame erected for Chief Minister Joseph Vijay’s birthday; act of vandalism by unknown persons! Police investigating.

பேனர் கிழிபடுவதற்கு முன்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக சார்பில், பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வாழ்த்து பதாகையை அக்கட்சியினர் நேற்று நிறுவி இருந்தனர். இன்று காலை வந்து கட்சியினர் வந்து பார்த்த போது பேனர் காணவில்லை, பிரேம் மட்டும் அங்கிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தவெ கட்சியினர் சுகுமார் தலைமையில் மருவத்தூர் போலீசில் இது குறித்து புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து பேனரை கிழித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் கொளக்காநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!