Perambalur: ‘Best Teacher’ Award for 7 Teachers in the District!

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆசிரியர்கள் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாலிகண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெ.வீரையன், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ம.வேல்முருகன், பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சை.சையத் முஸ்தபா, வி.களத்தூர், ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் த.முருகன், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பெ.லெட்சுமி, சு.ஆடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கெ.தமிழ்ச்செல்வி, ரஞ்சன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் மு.வளர்மதி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!