Perambalur: Kunnam constituency AIADMK candidate Saranya campaigns for votes alongside alliance partners!

குன்னம் தொகுதியில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில், ஐஜேகே வேட்பாளர் சரண்யான இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடல், கீழப்புலியூர், சிறுமத்தூர், கே.புதூர், நமையூர், பொன்னகரம், முருக்கன்குடி, பெருமத்தூர், நல்லூர், மிளகாநத்தம் உள்ளிட்ட பகுதியில் தனது கூட்டணி கட்சியினடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் சரண்யாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர். முன்னதாக கீழப்புலியூர் பச்சையம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது, அதிமுக முன்னாள் எம்.பி சந்திரகாசி, பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமாகா, ஐஜேகே, பாஜக மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக வாக்குகள் சேகரித்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!