Perambalur near the truck – car collision kills principal

பெரம்பலூர் : பெரம்பலூர் பாரதி நகரை சேர்ந்த கருப்பையா மகன் இளையராஜா (வயது 47). இவர் வரிசைப்பட்டியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பங்குதாரராகவும், அதே கல்லூரியில் முதல்வராகவும் இருந்து வந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில், பெரம்பலூரிலிருந்து அரியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் ஏரிக்கரை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!