Perambalur: Olympiad exam at Siruvachur Almighty Vidyalaya Public School! 1768 people participated!!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில், ஒலிம்பியாட் தேர்வு 1ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடந்தது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பெரம்பலூர் நகரில் உள்ள பள்ளிகளின் மாணவர்களும், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் என மொத்தம் 1768 பேர்கள் கலந்து கொண்டனர். தேர்வை பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார், துணை சேர்மன் மோகனசுந்தரம் தலைமையேற்று நடத்தினர். முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம், துணை முதல்வர் ராஜேந்திரன், மேல்நிலை வகுப்பு இயக்குனர் கார்த்திக், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மெஸ் ஊழியர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் உடன் இருந்து மாணவர்கள் திறம்பட தேர்வு எழுத உதவினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!