Perambalur: Police action against person involved in vehicle theft under the Goondas Act!
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட அத்தியூரை சேர்ந்த உமர்கித்தா மகன் முகமது இப்ராஹிம் (22) என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தன் பேரில் கலெக்டர் கிரேஸ் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில், முஹமது இப்ராஹிமை, குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.