Perambalur: Public grievance redressal camp regarding food supply: Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வி.வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், ஓதியம் கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் ரா.ஜெயஸ்ரீ தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும் 12.04.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!