Perambalur: Public relations project camp in Pudu Naduvalur village!
பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தில், வரும் 12.02.2025 (புதன்கிழமை) அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, பெரம்பலூர் வட்டம், புது நடுவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை புதுநடுவலூர் கிராம நிருவாக அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.