Perambalur: Robbery at Knifepoint — Motorcyclist Threatened and Robbed; Police Investigate!

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கருப்பையா (30). இவர் நேற்று இரவு தண்ணீர் பந்தலிலிருந்து வாலிகண்டபுரத்திற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பெட்ரோர் பங்க் ஒன்று அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கருப்பையாவிடமிருந்த ரூ. 300 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் அப்பகுதியில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணும் பணியில் தீவிர ஈடுபட்டுள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497