Perambalur: Special grievance redressal meeting for families of soldiers: Collector’s information!
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாள் 04.04.2025 வெள்ளி கிழமை மாலை 04.00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் / அவர்தாம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.