Perambalur: Students fly paragliding to raise awareness about drug abuse; Collector inaugurates event!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால் துறையின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரா க்ளைடிங் (Parachute flying events) சாகச நிகழ்ச்சியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் சப் – கலெக்டர் கோகுல் மற்றும் இரூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர்.பவித்ரா, லாடபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மாணவன் ஜெ.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் பாராசூட் மூலம் வானில் பறந்து போதை இல்லாத தமிழ்நாடு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வருவாய் மற்றும் காவல், கல்வித்துறையை சேர்ந்த பணியாளர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!