Perambalur: You can apply to be a member of the district-level Vigilance & Monitoring Committee in the Adi Dravidian & Tribal Welfare Department; Perambalur Collector’s information!

வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதிகள் 1995 மற்றும் உட்பிரிவு 17(1)-ன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016-ல் உட்பிரிவு 16-ன்படி அமைக்கப்படும் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இந்நிலையில் பெரம்பலூர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே, 2025 ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களை புதியதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளதால் இக்குழுவில் குரூப்-ஏ தகுதியுள்ள ஆதிதிராவிடர் ∕ பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அலுவலர்கள் மூன்று நபர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த அலுவல் சாரா- நான்கு நபர்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு அல்லாத அலுவல் சாரா தொண்டு நிறுவன மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் இப்பிரிவில் குழு உறுப்பினராக விரும்பும் தகுதியான நபர்கள் உரிய சான்று ∕ ஆவணங்களுடன் தனது விண்ணப்பத்தினை 25.02.2025 தேதிக்குள், பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கிடுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!