Periyar birthday: Wearing garland Periyar Statue in Perambalur by V.C.K party

பெரம்பலூர் மாவட்ட விசிக சார்பில் இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் ஆணையின் பேரில் பெரம்பலூர் பழையபேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரம்பலூர் (கிழக்கு) ஒன்றியசெயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் மாநிலதுணச்செயலாளர் வழக்கறிஞர் இரா.சீனிவாசராவ் , மாவட்ட செய்தித்தொடர்பாளர் மு.உதயகுமார், ஒன்றியசெயலாளர்கள்: எம்.பி.மனோகரன், எ.வெற்றியழகன், மா.இடிமுழக்கம், நகரசெயலாளர் தங்க.சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர்கள் : காமராஜ், ஜெயக்குமார், காட்டுராசா, ராஜூ, சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று, தி.க, திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெரம்பலூர், கூடலூர், கல்பாடி கைகாட்டி, இரூர், உள்ளிட்ட ஆகிய ஊர்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பகுத்தறிவாளர்கள் மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!