Police arrest 6 rowdies in Perambalur
தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் இருந்து, கைது செய்யப்படாமல் இருந்த ரவுடி பிடிக்க போலீசாருக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில், பெரம்பலூரில் நேற்றிரவு, கோனேரிப்பாளைத்தை சேர்ந்த முத்தையா மகன் பிரபு (எ) ராஜா (34), பெரம்பலூர், ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் மணி (47), நடராஜன், மகன் மணிகண்டன் (25), ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (31), மேட்டுத் தெருவை சேர்ந்த ராமலிங்கம், வினோத் (37), வடக்கு மாதவி ரோட்டை அயூப்கான் மகன் அப்துல்கரீம் (24), ஆகியோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். மேலும், பட்டியலில் மீதமுள்ள ரவுகளை கைது செய்யும் பணியில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.