Police search for stone-hearted mother who threw baby born near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வடக்கலூர் ஏரியில் பிறந்த ஆண்குழந்தையை, மர்ம நபர் யாரோ தூக்கி வீசி எறிந்து சென்று விட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், குழந்தைகயின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்ற கல்மனம் படைத்த தாயை தீவிர தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.