Polling stops due to non availability of symbol for candidate near Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 293 அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவருக்கு சின்னம் ஒதுக்க படாததால் தற்காலிகமாக வாக்குபதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு, அதிகாரிகள் தரப்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.