Poomi puja for wall building construction in Elambalur


பெரம்பலூரில் இருந்து எளம்பலூர் வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழி சாலைக்கு தடுப்பு சுவர் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் இன்று (21.09.2017) தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச் சாலையில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில், 200 மீட்டர் நீளத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படுவதற்கான கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜையை இன்று (21.09.17) எளம்பலூரில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பு சுவர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதால் சாலைப் பயணிளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!