Potta competition, Pongal greeting banner removed by Perambalur police action!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில், ஒரு தரப்பினர் முதலில், பொங்கல் வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்திருத்தினர். அதனை மற்றொரு தரப்பினர் நேற்று, அந்த பேனரை மறைத்து புதியதாக பெரிய அளவில் பேனர் வைத்திருந்தனர். இதனால், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் நிலை இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும், அழைத்து உடனடியாக பேனர்கள் அகற்றப்படவில்லை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பேரில் இரு தப்பினரும் பேனர்களை உடனடியாக அகற்றி எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!