பெரம்பலூர் : தற்போது கடுமையான கோடையின் வெப்பத்தை தவிர்ப்பதற்காகவே பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது. புரிதல் இல்லாமல் வெறும் மனப்பாடம் செய்து படித்து பெறும் மதிப்பெண்களால் எவ்வித மாற்றம் ஏற்படபோவதில்லை என அறிந்த தமிழக அரசு தற்போது மதிப்பெண்களை மாநில அளவில் வெளியிட தடையும் விதித்துள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறையில் பள்ளிகளில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சில தனியார் பள்ளிகள் உத்தரவை மீறி பள்ளிகளை திறந்து பத்து, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் இன்று முதல் நடத்தி வருகின்றன.
ஆனால், சில தனியார் பள்ளிகளிடம் கட்டிங் பெறுவதால் கல்வித்துறை அதிகாரிகள் கண்டும் காணமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், கலெக்டரிம் முறையிடலாம் என்றால் அவரும், அவரது குடும்பம் நன்றாக இருந்தால் போதும், அவருக்கு நாட்டையும், மக்களைப் பற்றியும் கவலையில்லை.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் சூப்பர் 30 என்ற வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசின் உத்திரவுகளை அரசு அலுவலர்களே மதிக்காமல் இருப்பதுதான் அதை விட வேடிக்கை