Public discussion on the transition and promotion to become teachers for the year. coming aug.20th
முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள அறிவிப்பு :

teachers-day பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஆக.20 (சனிக் கிழமை) முதுகலைக் கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்கு உள்ளான மாறுதலுக்கான கலந்தாய்வு, 21.08.2016 ஞாயிறு அன்று முதுகலை, கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு, 22.08.2016 திங்கள் அன்று பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, 23.08.2016 செவ்வாய் இடை நிலை ஆசிரியர், உடற்கல்வி தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

24.08.2016 புதன் இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஆக 27 சனிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் – பணிநிரவல் கலந்தாய்வு,

03.09.2016 சனிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு, 04.09.2016 ஞாயிறு பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு, 06.09.2016 செவ்வாய் இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆகிய கலந்தாய்வுகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும்.

கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் காலை 9.00 மணி முதல் துவங்கி நடைபெறும் என பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!