Public request to refrain from going to the festival of lights; Perambalur Collector Venkatapriya!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவில் தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 20.11.2021 வரை திருக்கோவிலுக்குள் செல்லவும், தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும், பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருகை தருவதை தவிர்க்க்கவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட மக்களும், தீபத் திருவிழாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு கலெக்டர் வெங்கட பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!