Public requests to set up an unused, well-built wire ring near PerambalurPublic requests to set up an unused, well-built wire ring near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவகுடி கிராமத்தில் நூலகம் அருகே பயன்பாடின்றி திறந்தவெளியாக பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்டு வந்த கிணறு, கடந்த சில ஆண்டுகளாக, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதால், பயன்பாடின்றி, கிணறு திறந்து கிடக்கிறது. இதன் சுற்றுசுவரும் சேதமடைந்து வருகிறது. அவ்வப்போது சிலர் தவறி விழுவது வாடிக்கையாகி வருவதால், கிணற்றின் மேல் பகுதியில் கம்பி வளையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.