Registration certificate is required must to run old age homes: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெற்றிருந்தால் மட்டுமே இயங்க வேண்டும். முதியோர் இல்லங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள், பதிவு செய்யாதவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 19.07.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறுவோர்கள், முதியோர் இல்லங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், முதியோர் இல்லங்கள் நடத்துவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!