Rs.16,000 Venture theft at Perambalur: 60 pounds of cash is Rs. 3 thousand escaped
பெரம்பலூர் கணபதி நகரை சேர்ந்தவர் முஸ்தபா மகன் கலிபுல்லா (வயது 50), தொழுதூரில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த நவ. 4ந் தேதி உடல் நிலை சரியில்லாததால் திருச்சி அருகே உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.
நேற்றிரவு மாலை வந்து வீட்டை திறக்க முயற்சித்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் திருடு போனது தெரியவந்தது.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 8 மட்டும் திருடு போனது தெரிய வந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த சுமார் 60 பவுன் நகை ரொக்கம் 3 ஆயிரம் தப்பியது.
இது குறித்து கலிபுல்லா கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், தடய அறிவியல் நிபுணர்களுடன் குற்றவாளிகளின் கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.