Sarvalayidipeeham at Perambalur Madana Gopal Swami Temple
பெரம்பலூரில் உள்ள மரதவள்ளி தாயார் சமேத மதனகோபல சாமி திருக்கோவிலில் இன்று திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சர்வாலய கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி, அக்கோவிலில், தீபவழிபாடும், அதனை தொடர்ந்து கோவிலினுள் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு , மதனகோபல சுவாமி மற்றும் தாயார் மரதவள்ளி உள்ளிட்ட உற்சவ சிலைகள் , சஞ்சீவிராயன் கோவிலுக்கு பல்லக்கில் எடுத்து செல்லப்பட்டு, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளி கோவில்களில் கார்த்தினை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சொக்கப்பனை சுடர் விட்டு எரிவதை கண்டு ரசித்தனர்.