Schools open this morning after a year and a half; Teachers who gave an enthusiastic welcome!

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் இன்று காலை அரசு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆர்வமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூ, இனிப்பு, பேனா, பென்சில், மாஸ்க் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக, உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்ற இடம் : பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஊராட்சியில் உள்ள தெற்கு பள்ளி.

பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர், பேரளி பள்ளி மாணவர்களுக்கு, பூங்கொத்து கொடுத்தும், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் அரணாரையில் உள்ள பள்ளியிலும் மாணவர்களுக்கு வரவேற்பும் கொடுத்தனர்.

முன்னதாக, ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தெற்கு மாதவி கிராமத்தில், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட, நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!