Seizure of 129 vehicles of persons roaming outside in violation of 144 restraining order; Police action!


கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருந்த நபர்கள் 129 பேர் வழக்குகள் பதிவு செய்தும், அவர்களின் 128 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த 89 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இருந்த 3 நபர்கள் என மொத்தம் 92 நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இன்று பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 316.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!