Shoppers refused to buy 5 rupee note in Perambalur; Suffer public

ஐந்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியும், சிறுவியாபாரிகள், மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூரில் 5 ரூபாய் நோட்டுக்களை கடைக்காரர்கள் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் 5 ரூபாய் தாள்களை கொடுக்கும்போது, அவர்கள் வாங்க மறுப்பதாகவும், பேருந்துகளிலும் வாங்க மறுப்பதால், நடத்துனர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. வங்கிகளுக்கு கொண்டு சென்றாலும், அவர்களும் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிக்ள உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!