Skill Development Exercises for Adithravidar, Tribal Students by TADCO: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோவின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் 2021-2022 ஆம் நிதியாண்டிற்கு அளிக்கப்படவுள்ளது

மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ / மாணவியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை கட்டணமின்றி பயிலலாம். மேலும் மாணவ / மாணவியர்களுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு SCVT / SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும்.

மேலும், தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களுக்கு சுயமாக தொழில் தொடங்கிட http://application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் (EDP) மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு (SEPY) திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

அரசு மானியம் 30% அல்லது அதிக பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்க ஆவண செய்யப்படும். பெரம்பலூர் மாவட்ட திதிராவிட/பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!